பொன்னேரியில் தமிழ்நாடு நாடார் சங்கம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 19 August 2024

பொன்னேரியில் தமிழ்நாடு நாடார் சங்கம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா.


பொன்னேரியில் தமிழ்நாடு நாடார் சங்கம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.அதில் 10-ஆம் வகுப்பு மற்றும் +2  தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு நாடார் சங்கதிருவள்ளூர் கிழக்கு மாவட்ட முதலாம் ஆண்டு விழா பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழா பொன்னேரி ஆதித்தனார் அரங்கில் மாவட்ட தலைவர் பெரியசாமி நாடார் தலைமையில் பொதுச் செயலாளர்கள் வீரக்குமார் நாடார் வி எல் சி ரவி நாடார் முன்னிலையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 


சிறப்பு அழைப்பாளராக வி வி மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வேல்முருகன் தமிழ்நாடு நாடார் சங்க கலை இலக்கிய அணி தலைவர் ஜெம் தொலைக்காட்சி நிகழ்ச்சி இயக்குனர் பேராசிரியர் பொன் கி பெருமாள்நாடார் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்  விழாவில் தலைமை நிலைய செயலாளர் பொன்ராஜ் நாடார் சென்னை மண்டல தலைவர் செந்தில்ராஜ் நாடார் பொது செயலாளர் ஸ்ரீராம் நாடார்  மாவட்ட பொது செயலாளர் பால் பாண்டி நாடார் பொருளாளர் மகாராஜா நாடார் உட்பட இளைஞரணி மகளிர் அணி பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்  முன்னதாக மாணவர்களில் கலை நிகழ்ச்சிகள் காமராஜரின் கவிதை கட்டுரை பாடல்கள் எடுத்துரைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad