போதை மாத்திரை பயன்படுத்திய 4 வாலிபர்கள் கைது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 3 August 2024

போதை மாத்திரை பயன்படுத்திய 4 வாலிபர்கள் கைது.


மீஞ்சூர் காவல் நிலைய தலைமை காவலர் சதீஷ் தலைமையில் காவலர்கள் ஐயப்பன் அருன், ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மீஞ்சூர் வண்டலூர் சாலை டோல்கேட் அருகே புதரில் 4 பேர் கொண்ட கும்பல் போலீசை கண்டதும் ஓடினர். பின்னர் அவர்களை பிடித்து விசாரித்த போது, கையில் ஊசி மற்றும் மாத்திரை வைத்திருப்பது தெரியவந்தது.தீவிர விசாரித்த போது போதை மாத்திரை எனவும், ஊசி மூலம் உடலில் ஏற்றுவதற்காக மறைந்திருந்ததாகவும், சென்னை வியாசர்பாடியில் இருந்து வாங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.


பின்னர் மீஞ்சூரை சேர்ந்த முரளிதரன், சேஷாத்திரி, சோழவரம் பகுதியைச் சேர்ந்த  சிவா, அபிஷேக், ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ஊசி மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுகுறித்து மீஞ்சூர் போலீசரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad