பழவேற்காடு அருகே அரங்கம் குப்பத்தில் மீன் பிடி வலைகள் எரிந்தது குறித்து மீன்வளத்துறை இணை இயக்குனர் நேரில்ஆய்வு; கடந்த சில மாதங்களாக மீன்பிடி வலைகள் எரிந்து சேதமாவது குறித்து மீனவ மக்களிடம் விசாரணை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 26 July 2024

பழவேற்காடு அருகே அரங்கம் குப்பத்தில் மீன் பிடி வலைகள் எரிந்தது குறித்து மீன்வளத்துறை இணை இயக்குனர் நேரில்ஆய்வு; கடந்த சில மாதங்களாக மீன்பிடி வலைகள் எரிந்து சேதமாவது குறித்து மீனவ மக்களிடம் விசாரணை.


பொன்னேரி அடுத்த பழவேற்காடு அருகே உள்ள அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மீன்பிடித்து விட்டு கரையில் வைத்திருந்த மீன் பிடி வலைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர்,மீன்வளத்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில்,சென்னை மண்டல மீன்வளத்துறை இணை இயக்குனர் சந்திரா,,திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த், ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மீனவப் பெண்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், கதறி அழுத்தனர்.கடந்த சில மாதங்களாக பழவேற்காடு பகுதியில் மீன்பிடி வலைகள் எரிக்கப்படுவது குறித்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி எரிந்து சாம்பலான வலைகளையும் மீட்கப்பட்ட வலைகளையும் பார்வையிட்டனர். 


ஆய்வுக்கு பின்னர் அரங்கம் குப்பம் மீனவ கிராம மக்களுக்கு ஆறுதல் கூறி இதற்குரிய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad