சோழவரம் போலீசார் இது குறித்து விசாரித்து வரும் நிலையில் தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பனைமரம் வெட்டப்பட்ட இடத்தில் நேரில் வந்து ஆய்வு செய்து பேட்டி அளித்த போது தமிழகத்தில் ஒரு கோடி பனை விதைகள் 1076 கிலோமீட்டர் 14 கடலோரங்களில் விதைக்கப்பட்டுள்ளன எனவும் பனைமர வேர்கள் மழை நீரை சேமித்து வைத்துக் கொள்வதாகவும் தமிழகத்தில் 15 கோடி பனை மரங்கள் உள்ள நிலையில் தற்போது குறைந்து கொண்டு 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன எனவும் தற்போது திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூதூரில் தாங்கள் கரை ஓரத்தில் நீர் நிலைகளை பாதுகாக்க நடப்பட்ட 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த நிலையில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இது குறித்து பனை மரத்தினை வெட்டிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் பனை மரத்தினை வெட்டுவது தடுக்க வேண்டும் எனவும் நீர் ஆதாரத்தினை பெறுக்க கிராமங்களில் பனை விதைகளை விதைத்து பனைமரம் உருவாக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் இதில் வடசென்னை சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் வில்லியம்ஸ் தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், பசுமை இயக்கம் தொழிலதிபர் அகிலன், பசுமை இயக்கம்,பாலன், சதீஷ், சிவா, மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment