மறுமலர்ச்சி திமுக கும்மிடிப்பூண்டி அனைத்து ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

மறுமலர்ச்சி திமுக கும்மிடிப்பூண்டி அனைத்து ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம்.


திருவள்ளூர் மாவட்டம் மறுமலர்ச்சி திமுக கும்மிடிப்பூண்டி அனைத்து ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலை  நிர்வாகி ரவிக்குமார் அலுவலகத்தில் ஒன்றிய குழு அவைத் தலைவர் தேர்வழி கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரதாப் வடக்கு ஒன்றிய செயலாளர் பாபு, மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தமிழ் இளங்கோ ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

திருவள்ளூர் மாவட்ட பிரதிநிதி வேணு  பாஸ்கர் குருநாதன் ஒன்றிய குழு செயலாளர் குமரேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மதிமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்  நெமிலிச்சேரி பாபு  கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அட்கோ மணி, மாவட்ட பொறுப்பாளர் தனஞ்செழியன், துணைச் செயலாளர் விஜயராகவன்,ரவிக்குமார் சுஜாதா ஹேமச்சந்திரன், மாங்காடு சங்கர் இணை செயலாளர் கார்த்திக்  ஹேமந்த் சுல்தான் பாய், சோழவரம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், பாபு சத்தியா ஜெயக்குமார், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் மாசி, பாரதி பொன்னேரி நகர செயலாளர் இதய குமார், ஆரணி பெயரும் செயலாளர் மணி நகரத் துணைச் செயற்குழுv ஆச்சாரி சங்கர், கலா பழனி ஜெய் சிட்டிபாபு வெள்ளைசாமி பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் நிர்வாகி மறைந்த காசிநாதன்,மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தபட்டது, கட்சியின் 31வது ஆண்டு தொடக்க ஆண்டை முன்னிட்டு நகர பேரூர் ஒன்றிய, மற்றும் கிராமங்களில் கட்சி கொடியேற்றதல், குறித்து ஆலோசனை  திருச்சியில் துரை வைகோவிற்கு பாராட்டு விழா கட்சி வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் நிர்வாகிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad