சென்னை செங்குன்றம் பகுதியில் அகில உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை மறுவாழ்வு மையம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 26 June 2024

சென்னை செங்குன்றம் பகுதியில் அகில உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதை மறுவாழ்வு மையம் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி.


நாடு முழுவதும் இன்று போதை விழிப்புணர்வு மற்றும் ஒழிப்பு தினத்தை அனுசரித்து வருகின்றனர் இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் சென்னை செங்குன்றம் சோத்துபாக்கம் சாலை பகுதி அமைந்துள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தின் சார்பில் மாபெரும் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 


இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் காவல் துறையினர் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர், இதில் பள்ளி மாணவர்கள் கைகளில் போதை வேண்டாம் போதை ஒழிப்போம் போதை நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு மற்றும் போதை எதிர்ப்பு வசனங்களை தாங்கிய பதாகைகளை கையில் ஏந்தி செங்குன்றம் சோத்துபாக்கம் சாலையிலிருந்து செங்குன்றம் மார்க்கெட் வழியாக புள்ளி லைன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று போதை ஒழிப்பு விட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.

No comments:

Post a Comment

Post Top Ad