முன்னதாக அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியை சேர்ந்த பழங்குடி இனத்தை சேர்ந்த.40 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா, ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் 50 பேருக்கு பட்டா, தாங்கல்நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ராஜீவ் காந்தி நகர் வண்டி பாட்டில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் 545 குடும்பங்களுக்கு பட்டா, அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியில் 300 பேருக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சி துணைத் தலைவர் எம் .டி .ஜி. கதிர்வேல் ஜமாபந்தி அதிகாரியிடம் மனு அளித்தார். மனுவை பெற்று கொண்டு ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தெரிவித்தார்.
இதில் வட்டாட்சியர் மதிவாணன் தனி வட்டாட்சியர் மோகனரங்கம் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் வருவாய் ஆய்வாளர் புருஷோத்தமன் வருவாய் ஆய்வாளர் அலுவலக உதவியாளர் எத்திராஜ் மற்றும் அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment