புழல் அருகே அடுக்குமாடி மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 June 2024

புழல் அருகே அடுக்குமாடி மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.


சென்னை புழல் கதிர்வேடு செல்லியம்மன் கோவில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வாசனை பொருட்கள் ரசாயன சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாசனை திரவியங்கள் எரிந்து நாசம்


சென்னை கதிர்வேடு செல்லியம்மன் கோயில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு மீது அமைக்கப்பட்டிருந்த வாசனை பொருள்கள் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் மாதவரம் அம்பத்தூர் செங்குன்றம் ஆகிய பகுதிகளிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மத்திய அனைத்தும் பணியில் ஈடுபட்டனர்


இந்த சேமிப்பு கிடங்கானது தீபக் குமார் என்பவருக்கு சொந்தமானது எனவும் இன்று காலை இந்த தீ விபத்து நடந்துள்ளது இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான வாசனை திரவியங்கள் தீயில் எறிந்து நாசமாயினா


அத்துடன் அதிக மக்கள் குடியிருக்கும் பகுதியில் மக்கள் குடியிருப்புக்காக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருக்கும் மீது வாசனை திரவிய சேமிப்பு கிடங்கு அமைந்திருப்பது சட்டத்துக்கு புறம்பானது என்றும் இவர்கள் இந்த சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டது என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


இத்துடன் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனிநபர் வியாபார ரீதியாக சேமிப்பு கிடங்கு அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்களுக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடும் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


இது போன்ற எளிதில் தீ பிடிக்கக்கூடிய வாசனை திரவியங்கள் கெமிக்கல் போன்ற தொழிற்சாலைகளுக்கும் சேமிப்பு கிடங்குகளுக்கும் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் அனுமதிக்க கூடாது என மக்கள் அரசுக்கு கெரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad