ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் 11 டன் ரேஷன் அரிசிகள் பறிமுதல் ஓட்டுநர்கள் இருவர் கைது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 June 2024

ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் 11 டன் ரேஷன் அரிசிகள் பறிமுதல் ஓட்டுநர்கள் இருவர் கைது.


சென்னை அடுத்த செங்குன்றம் சுங்கசாவடி அருகில் வந்த லாரியை மடக்கி பிடித்த குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலிசார் லாரியில் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை பகுதிக்கு கடத்த முயன்ற சுமார் 8 டன் எடை கொண்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து ஒட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர், விசாரனையில் மூலக்கடை  பகுதியை சேர்ந்த வசந்த் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை பகுதியை சேர்ந்த நல்லானி என்பவருக்கு கடத்தியது விசாரனையில் தெரியவந்தது.



மேலும் பாலவாயல் பகுதியில் வாகன சோதனையில் 3 டன் எடைக்கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு விசாரனை செய்ததில் மூலக்கடையை சேர்ந்த அதே நபர்கள் வேறு வாகனத்தில் கடத்தியது தெரியவந்தது பின்னர் 11 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமை பொருள் வழங்கல் குற்ற புலணாய்வு துறை போலிசார் இரண்டு வாகனங்களையும் ஒட்டி வந்த ஓட்டுநர்களை கைது செய்ததோடு ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து தலைமறைவான குற்றவாளிகளான வசந்த் மற்றும் மாரியப்பனை ஆந்திர மாநிலம் சூலூரை சேர்ந்த நல்லானி ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad