பொன்னேரி அருகே உள்ள சின்னகாவனம் கிராமத்தில் வசித்து வந்தவர் ரவுடி லட்சுமணன் 26 இவரது மனைவி ரம்யா( 24 )சினி ஆர்ட்டிஸ்ட் இவரை கூட்டாளியான ரவுடி விஷ்ணு அடிக்கடி சந்தித்து வந்த நிலையில் லட்சுமணன் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருவரும் இருசக்கர வாகனத்தில் சுற்றி வலம் வந்ததாக கூறப்படுகிறது இதனை அறிந்த லட்சுமணன் விஷ்ணுவிடம் தட்டி கேட்டு தகராறு செய்து ஈடுபட்டு நிலையில் மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு கிராமத்திற்கு லட்சுமணனை அழைத்து சென்றார் அங்கு விஷ்ணு அழைத்து வந்த மற்ற நான்கு பேரும் மது அருந்தி பின்னர் கத்தியால் வெட்டி லட்சுமணன் கொலை செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் நடந்த இந்த கொலைகள் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை போலீசார் தேடி வந்த நிலையில் தேவதானம் எட்டியம்மன் கோயில் தெருவை சார்ந்த ஹரிஷ் 19 காணியம்பாக்கம் தோப்பு காலனி சார்ந்த சாது 20 வெள்ளம்பாக்கம் அம்மன் கோயில் தெருவை சார்ந்த கார்த்திக் 21 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மூன்று பேர் மீது மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து மீஞ்சூர் காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment