இந்நிலையில் இன்று நடைபெறவிருந்ந ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பாஜகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பொன்னேரி மீஞ்சூர் கும்மிடிப்பூண்டி பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டத்திற்காக பாஜகவினர் வந்திருந்த நிலையில் போலீசார் ஆவடி துணை ஆணையர் ராபர்ட் ராஜா தலைமையில் குவிக்கப்பட்டனர் இந்நிலையில் பாஜகவினர் திடீரென ஊர்வலமாக கள்ளச்சாராயம் என எழுதிய பானையில் தமிழக அரசை கண்டித்து கோசமிட்டபடி உடனடியாக மது கடைகளை மூடக்கோரி சாலையில் ஊர்வலமாக வந்து பானையை போட்டு உடைத்தனர்.
பின்னர் தயார் நிலையில் வைத்திருந்த அரசு பேருந்து மற்றும் காவல் வாகனத்தில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர் இதில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் ஆர்ப்பாட்டத்தில் பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு லோகநாதன் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் பட்டியலணி மாநில துணைத்தலைவர் அன்பாலையா சிவகுமார் நகரத் தலைவர் சிவகுமார் மண்டல தலைவர் மகேஸ்வரி மாவட்ட துணை தலைவர் கோட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment