சென்னை புழல் அருகே மனைவி பிரிந்து சோகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 April 2024

சென்னை புழல் அருகே மனைவி பிரிந்து சோகத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.


சென்னை புழல் கதிர்வேடு வ உ சி நகர்பகுதியை சேர்ந்தவர் ரவி இவர் சில வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் இவரது மகன் இளையராஜா வயது 29 இவர் திருமணம் ஆகி மனைவி பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது இவரின் பகுதிகளில் சிறிய கூலி வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் இவர் குடி போதைக்கு அடிமையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் மது அருந்திவிட்டு தன் மனைவியின் ஞாபகம் வந்து கொண்டே இருப்பதாகவும் கூறியுள்ளார் அதன்பின் கதிர்வேடு வ உ சி நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று வீட்டினுள் தாலிட்டுக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் வீட்டினுள் சென்று பார்த்தவர்கள் இளையராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், சப்பும் குறித்து அக்கம் பக்கத்தினர் புழல் காவல்துறைக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இளையராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad