மாதவரம் செட்டிமேடு மக்கள் பயன்பாட்டிற்காக 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம் பராமரிக்கப்படாமல் சிதிலம்மடைந்ததை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 April 2024

மாதவரம் செட்டிமேடு மக்கள் பயன்பாட்டிற்காக 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடம் பராமரிக்கப்படாமல் சிதிலம்மடைந்ததை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.


சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 17 வது வார்டு செட்டிமேடுகிராமத்தில் 10 வருடங்களுக்கு முன்பு திமுக கவுன்சிலர் கவிதா நாராயணன் அவர்களின் நிதியின் கீழ் பதினோரு லட்ச ரூபாய் செலவில் மக்கள் பயன்பாட்டிற்காக பல்நோக்கு மண்டபம் கட்டப்பட்டது, இதை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களில் தனியார் மண்டபங்களில் அதிக செலவிட்ட முடியாமல் உள்ளவர்களுக்கு திருமணம் மற்றும் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் இந்த மண்டபத்தில் வைத்து நிகழ்த்தியுள்ளனர்.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளதாலும் இவர்கள் கூலி தொழில் செய்பவர்கள் என்பதாலும் இவர்கள் பயன்பெறும் விதத்தில் கவிதா நாராயணன் அவர்கள் கவுன்சிலராக இருந்த காலகட்டத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. 


10 வருடங்களாக சரிவர பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டிடம் ஆனது பராமரிப்பு இன்றி கட்டிடத்தின் மேல் பூசப்பட்டுள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்து பெயர்ந்து கட்டிடம் முழுமையாக சிதலமடைந்துள்ளது, அத்துடன் கட்டிடத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் இந்த கட்டிடத்தை சுப நிகழ்வுகளுக்காக பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர் 


அத்துடன் கட்டிடத்தின் உள் குப்பைகள் மாநகராட்சி உபகரண பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது கட்டிடம் முழுமையாக சிதலம்அடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருப்பதால் இந்த கட்டிடத்தை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad