சொரக்காய்ப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 1 February 2024

சொரக்காய்ப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்.


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே சொரக்காய்ப்பேட்டை அரசு மேல் நிலைப் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் M.A.வேலு தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். 

இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் பங்கேற்று 69 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். மற்றும் பள்ளிப்பட்டு திமுகவின் மத்திய ஒன்றியபொறுப்பாளர் பி.டி.சந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் பொன்.சு.பாரதி, ஊராட்சி மன்றத் தலைவர் S.வடக்குமலை, மு.கி.செ.S.S.ராமசாமி, கி.செ. S.D.ஏழுமலை, P.கோவர்தணநாயுடு, R.மோகன், V.V.மணி, B.D.ராஜேந்திரன், M.சிவகுமார், P.சுப்பிரமணி, E.எத்திராஜ், M.Kசுரேஷ், M.G.ஏழுமலை, V.வரால்நாயுடு, M.P.சேகர், M.P.பழனி, M.S.ரவி, கோவிந்தராஜன், K.J.லிங்கமூர்த்தி, M.K.அண்ணாதுரை, M.K.ஆறுமுகம், மோகன், D.G.தேசப்பன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad