கோடுவெளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் என்.ஒ.சுகபுத்தரன்(IAS) ஆய்வு - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 21 November 2023

கோடுவெளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில் திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் என்.ஒ.சுகபுத்தரன்(IAS) ஆய்வு


திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம்  கோடுவெளி ஊராட்சிக்கு உட்பட்ட காரணி இந்திரா நகரில் திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் என்.ஒ.சுகபுத்தரன்(IAS) பழங்குடியினர் (ST)திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் 36 குடியிருப்புகளை ஆய்வு செய்தார் பின்னர்  குடியிருப்புகளுக்கு சென்று அவர்கள் பெயர் கேட்டறிந்து வீடுகளை தரமாக கட்டுகிறார்களா எனவும் கேட்டறிந்தார்பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று கூடுதல் ஆட்சியர் 14_வது 15-வது நிதிக்குழு மானியத்தின்பணிகளை பதிவேடுகளை  மின் கட்டண பதிவேடுகளை மற்றும் கணக்கு புத்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, அ.நடராஜன், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன், ஊராட்சி மன்ற தலைவர் கே.சித்ராகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஏ.கே.எம்.சரத்குமார், வார்டு உறுப்பினர் ரமேஷ் ஊராட்சி செயலாளர் ஜெ.தாட்சாயணி,ஆகியோர் உடன் இருந்தனர். 


- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்.க.கணபதி.

No comments:

Post a Comment

Post Top Ad