திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய உட்பட்ட குருவாயல் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி.வெங்கட்டம்மாள் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் இ.சண்முகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் எம்.அஞ்சலா, ஜி.மல்லிகா, இ.புனிதவள்ளி, ஆர்.ராஜேந்திரன், டி.வாசு, பி.சுகுணா, இ.சேகர், எஸ்.தனலட்சுமி மற்றும் இந்த கூட்டத்தில் வரவு செலவு கணக்கு காண்பித்தல் வான் தரும் மழை நீரினை சேகரித்தல் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல் உடைந்த குழாய்களை சரி செய்து நீர் வீணாக்காமல் பாதுகாத்தல் நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துக் கூறுதல் நீர் நிலைகளில் தண்ணீர் சேகரமாக உரிய கால்வாய்களை தூர்வாரி புனரமைத்தல் மற்றும் ஊராட்சி திட்டபணிகள் குறித்தும் ஆலசிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன/
- திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் க.கணபதி.
No comments:
Post a Comment