அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமரைப்பாக்கம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எல்லாபுரம் மேற்கு ஒன்றியம் கழகத்தின் சார்பில் கோடை வெயிலை ஏழை எளிய மக்களுக்காக நீர் மோர் பந்தலை திறப்பு நிகழ்ச்சி எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்சமின் கலந்து கொண்டு தாமரைப்பாக்கம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார், பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, இளநீர் உள்ளிட்ட தாகம் தீர்க்கும் பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குருவாயல்தயாளன், கோடுவெளி ஒன்றிய குழு உறுப்பினர் குழந்தைவேலு, வெங்கல்வழக்கறிஞர் லிங்கன் மற்றும் தாமரைப்பாக்கம் அம்மணம்பாக்கம் கிளை செயலாளர் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் செய்தியாளர் க.கணபதி
No comments:
Post a Comment