பொன்னேரியில் அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 September 2022

பொன்னேரியில் அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  ஹரிகரன் பஜார் வீதியில் அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் அண்ணா114-வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



அதிமுக கழக இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க நடைபெற்ற கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் பொன்னேரி  தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பி பலராமன் தலைமை தாங்கினார். பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். 


இக்கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் டாக்டர் தமிழ் உசேன், திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம், உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர் நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, பிற அணி நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர், என ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் நகரத் துணைச் செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad