பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கலெக்டர் ஆய்வு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 September 2022

பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கலெக்டர் ஆய்வு.


ஆவடி மாநகராட்சி பள்ளிகளில், காலை சிற்றுண்டி திட்டம் மற்றும் செயல்பாடு குறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார்.


ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, முதல்கட்டமாக காலை சிற்றுண்டி திட்டத்தை, கடந்த 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், ஆவடி தொகுதிக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் அமைந்துள்ள அரசினர் மாநகராட்சி தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் திடீர் ஆய்வு செய்து, உணவின் தரம், சுவை குறித்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.


அப்போது மாவட்ட ஆட்சியர், சிற்றுண்டி சாப்பிட்டு பார்த்து, தரத்தை சோதனை செய்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad