பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் கைது.

திருமுல்லைவாயல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட திருமுல்லைவாயல் தென்றல் நகர் 17வது தெருவை சேர்ந்த மணிவண்ணன் என்பவரின் மகன் மன்மதன் என்பவர் அன்னனூர் ரயில் நிலைய பகுதிகளில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.


அவரை நேற்று 21.6.22 தேதி திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 3 சவரன் தங்க நகைகள் அரை கிலோ வெள்ளி பொருட்கள் 3 செல்போன்கள் மற்றும் ஒரு கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்து மன்மதனை அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad