மனைவி பணிபுரிந்த அலுவலகத்தில் குண்டு வீசிய கணவன். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 May 2022

மனைவி பணிபுரிந்த அலுவலகத்தில் குண்டு வீசிய கணவன்.

மனைவி பிரிந்து சென்றதால் அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருவள்ளுர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (30). வீடு, வீடாக பால் பாக்கெட் போடும் வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்த விஷ்ணு, இரண்டாவதாக 26 வயதான இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


அவர் வடபழனியில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இரண்டாவது மனைவியின் நடத்தையில் விஷ்ணு சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அத்துடன் மனைவி வேலை செய்யும் நிறுவனத்திற்கும் சென்று தகராறு செய்துள்ளார்.


இதனால் விஷ்ணுவை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு அவரது மனைவி சென்று விட்டார். அங்கிருந்து வேலைக்குச் சென்று வந்தார். முதல் மனைவி போலவே, இரண்டாவது மனைவியும் தன்னை விட்டுப் பிரிந்து போனதால் விஷ்ணு ஆத்திரமடைந்தார். இரண்டாவது மனைவி வடபழனியில் வேலை செய்யும் நிறுவனத்திற்குச் சென்று பெட்ரோல் குண்டை வீசினார். அத்துடன் அதனை வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். 


அவர் பெட்ரோல் குண்டு வீசிய போது யாரும் இல்லாததால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்தனர். மனைவி வேலை செய்யும் நிறுவனத்தில் கணவனே குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad