பாலியல் தொல்லை அரசு கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டம் - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 April 2022

பாலியல் தொல்லை அரசு கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டம்

பொன்னேரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேர் பகுதியில் அரசு கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.


இந்த கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று காலை முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர், கல்லூரி மாணவி ஒருவருக்கு உதவிப் பேராசிரியர் செல்போனில் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவ-மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தின் போது மாணவ-மாணவிகள் கோஷமிட்டு வருகின்றனர், மாணவ-மாணவிகள் போராட்டம் காரணமாக மறுஅறிவிப்பு வரும்வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad