தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர். - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 April 2022

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதள முறையில் விண்ணப்பித்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 சட்டப்பிரிவு 12 (1) சியின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இதன்பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013- 14 ஆம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வண்ணமும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வண்ணம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.


எதிர்வரும் 2022-2023-ம் கல்வி ஆண்டுக்கான திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையதள முறையில் விண்ணப்பிக்கலாம்.


கட்டணமின்றி பதிவேற்றம்


இதற்கான வசதி rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பெற்றோர்கள் அவரவர் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். மேற்கண்ட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாக இந்த மாதம் 20-ந்தேதி முதல் மே மாதம் 18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எந்த வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களை பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றோர், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், துப்புரவுத்தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம் இருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை செய்யப்படும். அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு முறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க கேட்டு் கொள்ளப்படுகிறது.


மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பினை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad