ஏழை குடும்பத்திற்கு உதவிய பாஜக அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

ஏழை குடும்பத்திற்கு உதவிய பாஜக அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயர் பாடி பகுதியைச் சேர்ந்தவர் சம்பூரணம் (35) கணவரால் கைவிடப்பட்ட இவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் இவரது வயதான தாயுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறனர் இந்நிலையில் சம்பூரணம் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த இரண்டு வாரமாக வேலைக்கு செல்லாமல்   சாப்பாட்டிற்கு வழியில்லாமல் வீட்டில் தண்ணீர் மட்டும் குடித்துக்கொண்டு இருந்து வந்துள்ளனர்.

இதனால் குடும்பத்தினர் முழுவதும் பட்டினி கிடந்த நிலையில் அருகில் உள்ளவர்கள் பாஜக மாவட்ட தலைவர் அமைப்பு சாரா மற்றும் மக்கள் சேவை பிரிவு வருண் காந்திக்கு  தகவல் தெரிவித்த நிலையில் உடனடியாக பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து குடும்பத்திற்கு தேவையான  அரிசி மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது தகவல் அறிந்து உடனடியாக குடும்பத்திற்கு உதவிய   பாஜக நிர்வாகிகளுக்கு சம்பூரணம் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர் 

No comments:

Post a Comment

Post Top Ad