கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கும்மிடிப்பூண்டி மேட்டு காலனி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள திறப்பின் சுவிசேஷ சபை உள்ளது, இந்த சபையில் அதிகாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்ற பின்னர் சபைக்கு வந்திருந்த பொது மக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் தின ஊர்வலம் பாஸ்டர் எம்.புருஷோத்தமன் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடங்களை அணிந்து வாகனத்தில் பேனர்களை கையில் ஏந்தி கும்முடிபூண்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பின்னர் ரெட்டம் பேடு வரை சென்று பின்னர் சபை திரும்பி வந்தடைந்தது, இதில் சபை மூப்பர்கள் போவாஸ், ஜசாக், சகரியா, ஜெயசீலன், ௭லேசியர், சாமுவேல் மற்றும் விசுவாசிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment