பூவளம் பேடு ஊராட்சி: பார்வையற்ற 30 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 December 2022

பூவளம் பேடு ஊராட்சி: பார்வையற்ற 30 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை.


பூவளம் பேடு ஊராட்சியில் வசிக்கும் பார்வையற்ற 30 குடும்பங்களுக்கு அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருட்களை அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் செல்வி இளவரசி வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூவளம் பேடு ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட பார்வையற்ற குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர் தற்போது மாண்டோஸ் புயல் தொடர் மழை காரணத்தினால் இப்பகுதியில் வாழும் பார்வையற்றவர்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து வந்தனர் இவர்களுக்கு உதவிடும் வகையில் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகை பேர் கிராமத்தில் இயங்கி வரும் அன்னை தெரேசா விளையாட்டு கல்வி மருத்துவம் சமூக அறக்கட்டளை இயங்கி வருகிறது.


இதன் நிறுவன தலைவரும் முன்னாள் ஊத்துக்கோட்டை ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான டாக்டர் செல்வி இளவரசி பார்வையற்றவர்கள் வசிக்கும் இடத்திலே நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி ஒவ்வொரு குடும்பத்திற்கு ஐந்து கிலோ அரிசி தக்காளி வெங்காயம் காய் கனிகள் அடங்கிய தொகுப்பு குழந்தைகளுக்கு பால் பிஸ்கட் பிரட் மதிய உணவு உள்ளிட்டவை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ், நிர்வாகிகள் தினகரன் லிசா உமாபதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்ட பார்வையற்ற  மக்கள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் செல்வி இளவரசிக்கு தாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad