பின்னர் மாலை சுமார் 06.15 மணியளவில் விருகம்பாக்கம், ரத்னாநகர் பகுதியில் டியூசன் முடித்து நடந்து சென்று கொண்டிருந்த தீபா என்ற 16 வயது சிறுமி வைத்திருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் சென்ற 2 நபர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். மேற்படி இருவேறு சம்பவங்கள் குறித்து அருண் மற்றும் சிறுமியின் உறவினர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்ததின்பேரில், 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விருகம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 2 சம்பவ இடங்களுக்கும் சென்று, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்ததில், 2 செல்போன் பறிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்கள் என தெரியவந்தது.
மேலும் காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி 2 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 1) டென்சில் காஸ்ட்ரோ (வ/22) குலசேகரபுரம், சென்னை, 2) கண்ணன் (வ/19) சாலிகிராமம், ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரர்களின் 2 செல்போன்கள் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment