திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து துணை மின் நிலையம் மற்றும் பொன்னேரி பஜாரில் போராட்டங்கள் நடத்தி வந்தனர் இந்நிலையில் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் மாதா சிலை அருகில் தொடர் மின்வெட்டால் பொன்னேரி பகுதி மக்கள் அவதிப்படுவதாக கூறி தடையில்லா மின்சாரம் வழங்கவும் 110 kv துணை மின் நிலைய அமைத்திடவும் மின் ஊழியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிடவும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் அணிப் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயற்குழு விஜயன் சிபிஎம் மாவட்ட செயலாளர் கோபால் பொது மக்களுக்கு தொடர் மின்வெட்டு மற்றும் மின்சாரம் வழங்காததை கண்டித்து கண்டன உரையாற்றினர் இதில் சிபிஎம் மாவட்ட குழு மதன் தவமணி சேகர் பகுதி குழு உறுப்பினர்கள் காளமேகம் நாகராஜ் பாலமுருகன் தனஞ்செழியன் நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Post Top Ad
Friday, 21 June 2024
பொன்னேரியில் தொடர் மின்வெட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - திருவள்ளூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், தூத்துக்குடி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment