74வது குடியரசு தினத்தை முன்னிட்டு அன்னை தெரசா கல்வி விளையாட்டு மருத்துவம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. - தமிழக குரல் - திருவள்ளூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 January 2023

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு அன்னை தெரசா கல்வி விளையாட்டு மருத்துவம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.


74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னிகைப பேர் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா கல்வி விளையாட்டு மருத்துவம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் செல்வி ஏ. இளவரசி தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

இன்று நாடு முழுவதும் 74 வது குடியரசு தின விழா கொண்டாடி வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகை பபேர் கிராமத்தில் இயங்கி வரும் அன்னை தெரசா கல்வி மருத்துவம் விளையாட்டு சமூக அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளையின் வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவரும் ஓய்வு பெற்ற முன்னாள் ஊத்துக்கோட்டை வட்டாட்சியருமான டாக்டர் செல்வி ஏ.இளவரசி தேசியக்கொடியை ஏற்றி வைத்து அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி ஏழை பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களான பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் இனிப்பு உடன் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் செயலாளர் அழிஞ்சிவாக்கம் எம்.ரகு, பொருளாளர் பிரின்ஸ், வழக்கறிஞர் கன்னியப்பன் மற்றும் நிர்வாகிகள் மல்லிகா, சிராஜ், தினகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad